மனம் நிறைய பாரத்தால்
நடந்தேன் கால்கள் கடுக்க
எங்கே சென்றேன் தெரியவில்லை
என் மனக்கதவை திறந்தேன்
மனதில் நிறைவாய்
நீ இருந்தாய் அழகாய்
இத்தனை நாளாய் எங்கிருந்தேன்
ஓர் உயிராய் உன்னில் நான்
விழித்தேன் கண்களில் நீர் ஆறாய்
அன்பான கவனிப்பால் தாயானாய்
எதார்த்தத்தை கற்பித்ததால் குருவானாய்
உள்ளத்தை பகிர்ந்ததால் தோழியானாய்
உணர்வினுள் நனைந்ததால் மனைவியனாய்
தவறுகளை தண்டித்ததால் தந்தையானாய்
என் இதயத்தை திருடியதால் காதலியுமானாய்
சற்றே நிமிர்ந்தேன்
என்னுள் நீ தேவதையாய்
No comments:
Post a Comment