Showing posts with label தேவதையாய். Show all posts
Showing posts with label தேவதையாய். Show all posts

Thursday, September 2, 2010

உன்னில் நான்

    
    
        மனம்  நிறைய பாரத்தால்

    நடந்தேன் கால்கள் கடுக்க
    எங்கே சென்றேன் தெரியவில்லை
    என் மனக்கதவை திறந்தேன்
    மனதில் நிறைவாய் 
    நீ இருந்தாய் அழகாய்
    இத்தனை நாளாய் எங்கிருந்தேன்
    ஓர் உயிராய் உன்னில் நான்
    விழித்தேன் கண்களில் நீர் ஆறாய்
    அன்பான கவனிப்பால் தாயானாய்
    எதார்த்தத்தை கற்பித்ததால் குருவானாய்
    உள்ளத்தை பகிர்ந்ததால் தோழியானாய்
    உணர்வினுள்  நனைந்ததால் மனைவியனாய்  
    தவறுகளை  தண்டித்ததால்  தந்தையானாய் 
    என் இதயத்தை திருடியதால்  காதலியுமானாய்
    சற்றே நிமிர்ந்தேன் 
    என்னுள் நீ தேவதையாய்