காலையில் தினசரிகளைத்திறந்து பார்த்தால் சாதிக்கலவரம் , மத கலவரம், இனக்கலவரம், தீவிரவாதம் , நக்சலைட் போராட்டம் என்று எங்கும் ஒரே இரத்த வாடைகள் தான் அடிக்கிறது.
ஒன்றுபட்ட இந்தியாவின் பகுதிகளான காஷ்மீரில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. பல ஆண்டுகளாக அரசு எவ்வளவு தீவிர முயற்சி எடுத்தும் இன்னும் அங்கு அமைதியை நிலைநாட்ட முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறது. காரணம் அங்கு செயல் படுத்தப்படும் நமது அரசின் செயல்பாடுகளில் உள்ள கையாலாகாதனம் தான்.
ஜார்கண்டில் தினம் தினம் இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு நிலையான மாநில அரசு அங்கு நிருவபடாமல் அதிகார வர்க்கம் சடுகுடு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது ....பாவம் மக்கள்.
குஜராத்தில் மதக்கலவரம் கலங்கடிக்கிறது. அரசு என் மதம் பெரிசு உன் மதம் பெரிசு என்று இன்று வரை மதத்தின் பின்னால் மதம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. நிதம் மதத்தின் பெயரால் படுகொலைகள் அரங்கேறுகின்றன. ரயில் கவிழ்ப்பு, பயணம் செய்யும் அப்பாவி பயணிகளை நித்திரையிலேயே பரலோகம் அனுப்புகின்றனர் .
கொல்கத்தா, ஆந்திரத்தில் நக்சல்களின் போராட்டம் இன்றும் ஓயவில்லை, எங்கும் மரணவோலம் இன்று யாரை கடத்துவர்களோ , என்று அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கையை பிசைந்து கொண்டிருக்கும் ஒரு நிலை.
மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனை போல இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகளை நமது இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது ...இது மாநில அரசின் கடமை என்று கைகாட்டி வேடிக்கை பார்கிறது. நம்மை அன்றைய ஆங்கிலேயர்கள் 'Divide and Rule ' என்று கொள்கையில் ஒற்றுமையின்மையை விதைத்து நம்மை அரசாட்சி செய்தனர். நம் மத்திய அரசும் இதைத்தான் இப்போது செயல் படுத்துவதாகவே தோன்றுகிறது.
மாநிலத்திற்கு சுயாட்சி தேவை தான் எவற்றில் சுயாட்சி தேவை என்பதையும் ஒரு வரைமுறைபடுத்த வேண்டும். தீவிரவாதத்தையும் , மத கலவரத்தையும் ஒடுக்குவதிலேயே ஒரு தெளிவான கோட்பாடு வேண்டும் முடிந்தால் ராணுவம் போன்ற ஒரு அமைப்பை இந்திய முழுவதும் சுயமாக யாருடைய தூண்டுதலும் இடர்பாடுகளும் இன்றி செயல்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கி இந்திய தேசத்தை அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளலாம்.
பாப்ரி மசூதி - அயோத்தியா வழக்கில் செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதி காப்போம் !!
மதம் இதமாக இருக்கட்டும்,
சாதிகள் சம்பிரதாயமாக இருக்கட்டும் !
சாதிக்கு சாதி மணம் உண்டு,
மதம் அனைத்திலும் அன்பு உண்டு !
அனைவரும் ஏற்ப்போம்,
அலகாபாத் தீர்ப்பை !!
நாம் இந்தியர் ! நமது தேசம் இந்தியா !! இதில் உறுதி கொள்வோம் !!!
பாப்ரி மசூதி - அயோத்தியா வழக்கில் செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதி காப்போம் !!
மதம் இதமாக இருக்கட்டும்,
சாதிகள் சம்பிரதாயமாக இருக்கட்டும் !
சாதிக்கு சாதி மணம் உண்டு,
மதம் அனைத்திலும் அன்பு உண்டு !
அனைவரும் ஏற்ப்போம்,
அலகாபாத் தீர்ப்பை !!
நாம் இந்தியர் ! நமது தேசம் இந்தியா !! இதில் உறுதி கொள்வோம் !!!
3 comments:
உண்மைதான் .. இந்தியராய் ஒன்று படுவோம்
இந்தியராய் இணந்திருப்போம் !!
மாநிலத்திற்கு சுயாட்சி தேவை தான் எவற்றில் சுயாட்சி தேவை என்பதையும் ஒரு வரைமுறைபடுத்த வேண்டும்.///
இது மிக சரி
தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அமைதி காப்போம் !!///
ஆமாம் அமைதி காப்போம்
Post a Comment