Thursday, September 2, 2010

பதிவுலகில் புதிய அறிமுகம்


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என்னை சுய அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

நான் கடந்த சில மாத காலமாக ஒரு பார்வையாளனாக பதிவுலக நண்பர்களின் படைப்புகளையும், கருத்துகளையும் , எண்ண உருவாக்க உணர்ச்சிகளையும் கண்டு ரசித்து இருக்கிறேன், வியந்தும் இருக்கிறேன்.

நண்பர்கள் அனைவருமே, தங்களது எண்ண சிதறல்களை மிக தெளிவாகவும், அதே சமயத்தில் தான் கொண்டு இருக்கும் கருத்துகளின் வலிமையை எப்போதும், எதற்கும் விட்டு கொடுக்காத வண்ணம் இருக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி.

அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக பதிவு உலகத்தின் விரும்பதகாத தனி பட்ட கருத்துகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு, தாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்ற  சுய நினைவு கூட  இல்லாமல் சேறுகளையும், கழிவுகளையும் ஒருவருக்கு ஒருவர் எரிந்து தங்களது சுய நிறத்தை இழந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நான் அறிமுக பதிவர் என்ற முறையிலும், அதை விட நெடுங்கால பார்வையாளன் என்ற முறையிலும் சொல்ல விரும்புவது, அனைவருக்கும் தெரியாத ஒன்று அல்ல.

எழுத்து என்னும் ஆயுதம் இவ்வுலகில் மிக வலிமையானது என்பதை அறியாதவர்கள் போல நடந்து கொள்கின்றனர்.
              
              "ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் 
               தீதுஉண்டோ மண்ணும் உயிர்க்கு." - குறள்

அனைவரும் கருத்துக்களால் விவாதம் செய்யலாமே ஒழிய தனிப்பட்ட விருப்பங்களையும், பழி வாங்குதலையும் எண்ணிக்கொண்டு தங்களுக்குள் குழுக்களாக அமைத்துக்கொண்டு புறங்கூறுதல் நல்லது அல்ல.
               
                "புறன் கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் 
                 அறங்கூறும் ஆக்கம் தரும். " - குறள் 

நாம் அனைவரும் தமிழர்கள், குணத்தால் , நிறத்தால், எண்ணத்தால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நம் தமிழ் பண்பாடு சிறிதேனும் குறைவின்றி ஒருவருக்கு ஒருவர் அன்பு கொண்டு தமிழ் பதிவுலகில் கண்ணிய குறைவின்றி கருத்து யுத்தம் செய்வோம்.

பதிவுலகில் சா(தீ)யம் கூடாது. எப்போது சா(தீ)யம் நுழைகின்றதோ  அங்கே பொது கருத்துகளை பகிர்ந்திட முடியாது . தனிப்பட்ட சாயத்தை மட்டுமே பார்க்க முடியும். எழுத்து அனைவருக்கும் பொதுவான சொத்து என்பதை உணர்ந்து சாயம் பூசாதிருங்கள் . உலகம் முழுவதும் தமிழர்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் என்று நினைக்கும் சக புது பதிவர்.

அடுத்து வரும் பதிவுகளில் என்னுடைய பிற சிந்தனைகளை பகிர்ந்திட வருகிறேன்.


உங்கள் நண்பர்களில் ஒருவனாய் எண்ணி ஆதரவு தாருங்கள்.....!

1 comment:

ஸ்ரீ.... said...

நல்ல கருத்துக்கள் நண்பரே. நான் எழுத நினைத்தவற்றை நீங்கள் எழுதிவிட்டீர்கள். மகிழ்ச்சி. பதிவுலகில் பல சாதனைகளை நிகழ்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....